For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
05:40 PM May 07, 2025 IST | Web Editor
 அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்   வரலாறு படைத்த இந்திய ராணுவம்    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

Advertisement

நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரேனும் உயிரிழந்துள்ளார்களா எந்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது,

"பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை ராணுவம் கொடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியால்தான் இந்த தாக்குதல் சாத்தியமானது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.  பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியுள்ளோம்.

பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் திட்டமிட்டு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூரின் இலக்கு முழுமையாக எட்டப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய வீரர்கள் மகத்தான தைரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய முப்படைகளால் நாட்டிற்கு பெருமை. துல்லியத்தாக்குதல் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டி உள்ளது"

இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement