Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவும் நடிகை அறந்தாங்கி நிஷா!

01:06 PM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் நேரடியாக சென்று நடிகை நிஷா உதவி செய்து வருகிறார்.  சுமார் 6000 பெண்களுக்கு நாப்கின் வழங்கி அவர் உதவினார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அதே போல்,  நடிகை அறந்தாங்கி நிஷா, அவரது கணவர் மற்றும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், பெட்ஷீட் போன்ற பொருட்களை வழங்கி நிவாரண உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் நிவாரண முகாம்களில் உள்ள ஏராளமான பெண்கள் அவர்களிடம் நாப்கின் வழங்குமாறு கேட்டுள்ளனர். இதனால் சுமார் ஒரு 6000த்திற்கும் அதிகமான பெண்களுக்கு அவர்கள் நாப்கின் வழங்கி உதவி செய்துள்ளதாக நடிகை நிஷா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் முன்பு பல்வேறு பட்டிமன்றங்களில் அவர் பேசியுள்ளதாகவும், அந்த மாநகர மக்கள் தன்னிடம் அன்பாக பழகுவார்கள் எனவும், அதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து நேரடியாக உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை நிஷா உதவிகள் செய்து வருவதற்கு, சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Aranthai NishaHelpNews7Tamilnews7TamilUpdatesNishaReliefThoothukudiTuticorin
Advertisement
Next Article