For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? நடிகை டாப்சி பரபரப்பு பேட்டி!

04:34 PM Jul 16, 2024 IST | Web Editor
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்  நடிகை டாப்சி பரபரப்பு பேட்டி
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என பிரபல பாலிவுட் நடிகை டாப்சி பன்னு விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும், இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டை கடந்த 12ஆம் தேதி கரம் பிடித்தார். இவர்களுடைய திருமணம் தான் தற்போது உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அம்பானி இல்ல திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்?. மேலும் இந்த திருமணத்திற்கு ரூ.5000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்களும் வெளிவருகின்றன.

இந்த திருமணத்தில் பாலிவுட்டின் அனைத்து பிரபரலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் டாப்சி கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என டாப்சி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய டாப்சி,

"எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தக் குடும்பத்துடன் சிறிதும் பழக்கமில்லை. எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.

Tags :
Advertisement