For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா - உசிலம்பட்டியில் கோலாகலம்!

உசிலம்பட்டி அருகே ஒன்பது ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 9 முத்தாலம்மன் சிலை எடுத்து ஊர் சாத்திரை திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
06:57 AM Jun 08, 2025 IST | Web Editor
உசிலம்பட்டி அருகே ஒன்பது ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 9 முத்தாலம்மன் சிலை எடுத்து ஊர் சாத்திரை திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா   உசிலம்பட்டியில் கோலாகலம்
Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராம ஊராட்சிக்குட்பட்ட தும்மக்குண்டு, பிச்சம்பட்டி, டி.பெருமாள்பட்டி, டி.பெருமாள்கோவில்பட்டி, உடையான்பட்டி, கரிசல்பட்டி, ரெட்டியபட்டி, போனிநாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை
கொண்டாடப்படும், ஊர் சாத்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

Advertisement

கடந்த 6 ஆம் தேதி துவங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பிச்சம்பட்டி கிராமத்தில் இருந்து 9 கிராமங்களுக்கும் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்த 9 ஊர் முத்தாலம்மன் சிலைகளையும், தலையில் சுமந்தவாரு அந்த அந்த ஊர்களுக்கு வாணவேடிக்கை முழங்க கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அணைத்து கிராமங்களில் உள்ள முத்தாலம்மன் கோயில்களில் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் எனவும், மீண்டும் இரவு 9 ஊர் சிலைகளும் தும்மக்குண்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு கொண்டு சென்று கரைக்கப்படும் என கூறப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 9 ஊர் மக்களுக்கும் விழா எடுக்க சாற்றுதல் எனப்படும் சொல் மறுவி ஊர் சாத்திரை என மாறியதாகவும், இத்திருவிழா எடுத்தால் மழை பெய்து 9 கிராமங்களும் செல்வ செலிப்பாகும் என்பது இந்த கிராமங்களின் ஐதீகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊர் சாத்திரை திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாலம்மன் தரிசனம் பெற்றனர்.

Tags :
Advertisement