ரயில்வே பாலம் அருகே கிடந்த சூட்கேஸ்... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... தொடரும் மர்மம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள ஆனேக்கல் தாலுகா பழைய சந்தப்பூர் ரயில்வே பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தனர்.
இதையும் படியுங்கள் : மாயமான ஊராட்சி செயலாளர் குட்டையில் சடலமாக மீட்பு… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!
அப்போது, அதில் 10 வயது சிறுமியின் உடல் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த சிறுமி வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவரது உடலை சூட்கேசில் அடைத்து ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சிறுமியின் உடலை போலீசார் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சூட்கேசில் வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து, உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக காணாமல் போன சிறுமிகள் குறித்த வழக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சூட்கேசில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.