Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்ட உடைந்த சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்!

09:12 PM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement

பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள சிக்னலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுரவாயல் சிக்னல் அருகில் சாலையின் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பணியாளர்கள் பள்ளத்தை கான்கிரீட் கலவைகளைக் கொண்டு சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலை சேதமடையாத வகையில் தடுப்புகளை அமைக்காமல் சாலையின் நடுவே உடைந்து போன சிக்னலை வைத்துவிட்டு சென்றனர்.

இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய ஆயிரம் கணக்கான வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக சாலையின் நடுவே வைத்துள்ள உடைந்த சிக்னலால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறையான பராமரிப்பு உபகரணங்களை வைக்காமல். விபத்து ஏற்படும் வகையில் சாலையின் நடுவே உடைந்து போன சிக்னலை வைத்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விபத்து ஏற்படாத வகையில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துள்ளனர்.

Tags :
ChennaiMaduravayalnews7 tamilNews7 Tamil UpdatesRoad maintenance workThiruvallur DistrictVehicle drivers
Advertisement
Next Article