For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போராட்ட செயல்பாடுகள் ஓயாது...உயர்த்திய கொடிகள் தாழாது...மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு!

11:10 AM Feb 21, 2024 IST | Web Editor
போராட்ட செயல்பாடுகள் ஓயாது   உயர்த்திய கொடிகள் தாழாது   மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு
Advertisement

சாதி மதச் சழக்குகள் இருக்கும் வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.

மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும் வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை,  ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement