For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை கௌதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது.!

08:59 PM Nov 03, 2023 IST | Web Editor
நடிகை கௌதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது
Advertisement

நடிகை கௌதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை, ஈ.சி.ஆர் சாலையில்  வசித்துவரும் பிரபல நடிகை கௌதமி  சென்னை காவல் ஆணையாளர் அலுவலத்தில்  புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான திருவள்ளுவர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்த சுமர் 8.3 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகார பெற்றுக்கொண்டதாகவும் அதன் பின்னர் அந்த இடத்தினையும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர்.

இடத்தை விற்ற அவர்கள் தனக்கு ரூ.4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்ததாகவும் அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான் தனக்கு சொந்தமான இடத்தினை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்து விட்டு தனக்கு வெறும் ரூ4.10 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிய விவரம் தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தன்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் தொடர்புடையவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு EDF-1-ல் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, EDF-1. காவல் உதவி ஆணையாளரின்  தலைமையிலான காவல் ஆய்வாளர் V. ஆபிரகாம் குரூஸ் மற்றும் காவல் குழுவினர், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை கைது செய்தனர். மேலும் பலராமனை  நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement