For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரச்னையை முடிக்க பாஜக சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை ” - ராமதாஸ்!

“குருமூர்த்தி, சைதை துரைசாமி மட்டுமே பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
03:17 PM Jun 12, 2025 IST | Web Editor
“குருமூர்த்தி, சைதை துரைசாமி மட்டுமே பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“பிரச்னையை முடிக்க பாஜக சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை ”   ராமதாஸ்
Advertisement

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Advertisement

எனக்கும், கட்சியின் செயல் தலைவருக்கும் நடக்கும் பிரச்னைகள் முழுவதுமாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சிறந்த ஆளுமைகள் உள்ள இரண்டு பேரின் சமரச பேச்சு வார்த்தைகள் டிராவில் முடிந்து விட்டது. இங்கே இருந்து கட்சியை வளர்ப்பது நான். அவர் வெளியே சென்று மக்களை சந்திப்பதுதான் திட்டம். தோட்டத்தில் பூட்டிய கதவுகளுக்குள் இருந்து கொண்டு என்னால் தொண்டர்களை சந்திக்காமல் இருக்க முடிவதில்லை.

இது கடைசியாக பஞ்சாயத்தில் முடிந்தது. 14 பேர் எனக்கு பஞ்சாயத்து செய்தவர்கள். யார்? என்று உங்களுக்கு தெரியும். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டு தர தயார் என கூறினேன். அதற்காக கவுரவ தலைவர், வன்னியர் சங்க தலைவரை பார்த்துவிட்டு வருங்கள் என்று மாநாட்டிற்கு முன்பே சொன்னேன். இதற்கு அவர் மறுக்கவே என்னுள் இருந்த கோவம் வெளியே வந்தது.  நீயா.. நானா என பார்த்துவிடுவோம் என தொடங்கி தற்போது உங்களை சந்திக்கிறேன். எல்லாம் எனக்கே வேண்டும்; ராமதாஸ் தோட்டத்தின் கேட்டை பூட்டி விட்டு, அவர் பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடட்டும் என தெரிவித்தார்.

என்னால் அப்படி இருக்க முடியாது. மக்களோடு 46 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைக்கிறார்கள்; நான் அவர்களை உயிருக்கு மேலாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குல தெய்வம் என அழைக்கிறார்கள். நான் அவர்களை தொண்டர்களாக இல்லாமல் வழிகாட்டியாக நினைக்கிறேன். 46 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சியை இன்னும் ஒரீரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா?. எனக்கு உரிமையா, இல்லையா என கேட்கவே அவமானமாக உள்ளது. கட்சி என்ற மாளிகையில் நான் குடி அமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்ககூடாது என, அவர்களிடம் தெரிவித்து என்னை மானபங்கம் செய்கிறார். அமைதியாக காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் வந்து இருக்கும். அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன?. இதுபோன்ற தவறான தகவல்களை மாவட்ட செயலர்களிடம் கூறி என்னை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டார். அமைதி காத்திருந்தால் ஓரீரு ஆண்டுகளில் அவருக்கு நானே முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன்.

தந்தைக்கு பிறகே தனையன்; ஐயாவுக்கு பிறகே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்; ஆனால் தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக்கூடாது. இதுவே உலகளவில் நீதியாகவும், சாஸ்திர சம்பிரதாயமாகும். என்னை குல சாமி எனக் கூறி என் நெஞ்சை குத்துகிறார்கள். என்னை அகல பாதாளத்தில் தள்ளுகிறார்கள்.
ஐய்யாவே என் தெய்வம் என கூறிக்கொண்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னை சிறுமைப்படுத்துகின்றனர். என்னையை குறிவைத்து தாக்குகின்றனர்.

என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசீனப்படுத்திவிட்டு உருவ படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணாமாக்கி நடைபயணம் செய்யப்போகிறார்களாம். இது எல்லாமே நாடகம்; அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள். 7 ஆண்டுகளுக்கு முன் மோடி பதவியேற்புக்கு நான் டெல்லி சென்றேன். நான், அன்புமணி, ஜி.கே.மணி சென்றிருந்தோம். அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை, அப்பா நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி விட்டு நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என அப்போது கூறினார்.

6 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இது போன்ற எண்ணம் இருந்துள்ளது.
அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததாக நான் நினைக்கிறேன். இரண்டு ஜாம்பவான்கள் வந்தார்கள்; அவரிடம் பேசி எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த தேர்தல் முடியும் வரை அவர் அமைதியாக இருந்திருக்கலாம். பிரச்னைகளுக்கு பின்புலம் யாரும் இல்லை. யார் சொன்னலும் அவர் கேட்க மாட்டார்.

முயலுக்கு 3 கால்கள் என சொல்லும் நிலையில் அவர் உள்ளார். 40, 50 தொகுதிகளை எடுத்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். ஆனால் அவர் உழைப்பதற்கு தயாராக இல்லை. தர்மபுரியில் யார் நிற்பது என கேட்கும் போது, அவர் மட்டுமே நிற்க வேண்டும் தெரிவித்தார். பிறகு தான் நிற்கவில்லை சௌமியாக நிற்க போகிறார் என்றார், நான் நமது குடும்ப பெண்கள் யாரும் தேர்தலில் நிற்பதில்லை என தெரிவித்தேன்.

பிறகு அவர்கள் என்னிடம் கூத்தாடி, கெஞ்சி சௌமியாவை நிற்க வைக்க என்னை
கையெழுத்து போட வைத்தனர். குருமூர்த்தி என்னை இங்கே சந்தித்தார். பிறகு நான் அவரை சென்னை சென்று சந்தித்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு என் கால்கள் சென்றுள்ளது. வழக்கறிஞர் பாலு சரியில்லை என்பதால் அவரை மாற்றியுள்ளோம். அவரே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்த தேர்தல் முடிந்த பிறகு எல்லாமே அவர் எடுத்து செல்லட்டும். அதுவரை நான் தான் தலைவர்.

நிர்வாக குழு கூட்டத்தை கூட்டினேன் அதில் ஒருவர் லேசாக இவரை விமர்சித்தார்.  அப்போது அன்புமணி அவர் மீது கோவப்பட்டார். துப்பாக்கி இருந்தால் அவரை
சுட்டிருப்பார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நான் சொல்லி தான் பேசியதாக அவர் நினைத்துக் கொண்டார். அப்போது தான் தலைமை பண்பு அவருக்கு இல்லை என்று நான் சொன்னேன். பணம் வாங்கிகொண்டு அன்பழகன் பதவி கொடுத்து வருவாதக கூறுகிறார்கள். அவர் இங்கு தான் இருக்கிறார். நீங்களே கேளுங்கள். நான் செயல்தலைவராக இருக்கிறேன் என்று அப்பா சொன்னதை அவர் மந்திர சொல்லாக எண்ணி இருக்க வேண்டும்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, இராமயணத்தில் ராமனை காட்டுக்கு போக சொன்னது அவர் தந்தை தான். அன்று மலர்ந்த தாமரை போல ராமன் காட்டுக்கு சென்றான். அது போல் அவர் செய்திருக்க வேண்டும். இந்த பிரச்னை முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு தலைவர் பதவி குறித்து எந்த கடிதமும் அனுப்பவில்லை. 90 சதவீதம் தொண்டர்கள், மக்கள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள். பாமக ஒரு சாதிக்கான கட்சி அல்ல. தமிழ்நாட்டில் 324 சாதிகளுக்காக பாடுபடும் கட்சி பாமகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பும் கட்சிகளுக்கு தெரியும் நல்லது கெட்டது.

யாரை சந்திக்க வேண்டும் என்பதும் தெரியும். தலைவர் பதவி 3 ஆண்டுகள் மட்டுமே அது முடிந்து விட்டது. மீண்டும் பொதுக்குழு கூட்டி தான் முடிவு செய்ய வேண்டும். பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் நிறுவனருக்கு மட்டுமே உள்ளது.  அவர் எப்போது முடிவு செய்கிறாரோ அப்போது பொதுக்குழு கூட்டப்படும்.
கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். தேர்தலை நோக்கி எனது பணி சென்று கொண்டிருக்கிறது. எல்லாவற்றிருற்கும் ஒரு முடிவு உள்ளது. காலம் போக போக தெரியும்.

நான் நியமிக்கும் பொறுப்பாளர்கள் எல்லாம் என் பக்கம்.இதுவரை தவெக வுடன்
எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர்கள் பேசினால் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். எம்ஜிஆர்மறைந்த பிறகு தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். விஜயகாந்த் மனைவிற்கு பிறகு தான் பிரேமலதா வந்துள்ளார். அதற்கு முன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. நான் எடுத்துள்ள முடிவை பல்வேறு அரசியல் தலைவர்களும் சரியான முடிவு என தெரிவிக்கின்றனர்.

என் உயிரிலும் மேலான சொந்தங்களே நான் வழக்கமாக சொல்வது உண்டு.
அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அமித்ஷா உட்பட பாஜக சேர்ந்த யாரும் என்னிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாமக பொதுச்செயலாளரை காணவில்லை. கண்டுபிடித்து தந்தால் பரிசு தருகிறேன். குருமூர்த்தி, சைதை துரைசாமி மட்டுமே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.” என்றார்.

Tags :
Advertisement