Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதலியை சேர்த்து வைக்கக் கோரி 5 முறை கிணற்றில் குதித்த காதலன்...எடப்பாடியில் பரபரப்பு!

10:56 AM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

எடப்பாடி அருகே காதலியை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர்
முனியப்பன் மகன் விஜய். இவருக்கும், கொங்கணாபுரம் அருகேயுள்ள பாலப்பட்டி
பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

அந்த பெண் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவியின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த காதலன் விஜய், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலப்பட்டி அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி விட்டு 4 முறை குதித்தவர் 5வது முறை மேலே வர முடியாமல் தவித்துள்ளார்.

இது குறித்து காதலியின் உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கும்,
எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த
தீயணைப்புத்துறையினர் விஜய்யை உயிருடன் பத்திரமாக மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் போலீசார் இளைஞர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மாணவியும், விஜய்யுடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

காதலியை சேர்த்து வைக்கக் கோரி மது போதையில் வந்த காதலன் கிணற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
PoliceSalemsuicide attempt
Advertisement
Next Article