Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்" - வானதி சீனிவாசன் பேட்டி!

கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12:45 PM Oct 13, 2025 IST | Web Editor
கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அமைக்க தாய்மை திட்டத்தை துவக்கி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை என பேசுகின்ற ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் மட்டுமல்லாது, பெண்களுக்கு மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களை கூட சேர விடாமல் செய்கின்றனர்.

Advertisement

தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து விட்டு அதற்காக போராடுபவர்களை அடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம். அதனை அரசியல் என நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள். கூட்டணி அமையும் போது சிலர் சில கருத்தை சொல்லத்தான் செய்வார்கள்.

அதிமுக பொதுச் செயலலர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கிய பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, "அவருக்கும் பரப்புரை உள்ளது. அவர் வரவில்லை என்றாலும், எதிர்கட்சி சட்டமன்ற துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆகியோர் கலந்து கோண்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும். கோவையில் 28 ஆம் தேதி துணை குடியரசுத்தலைவர் நிகழ்வு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
#LegislatureEPSKarur incidentkovaiOppositionvanathi srinivasan
Advertisement
Next Article