Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

07:48 PM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பேச்சை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.

Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற எனது தொடர் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அமர்ந்தார்.

இந்நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன் பின்னர் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநர் ரவி, உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறியதும், ஆளுநர் பேசிய விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில், இன்று சட்டசபையில் ஆளுநர் பேசியது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் பேசியதை தமிழ் சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.

Tags :
governmentGovernorGovernor RaviJana gana mananational anthemNews Updatenews7 tamilNews7 Tamil UpdatesPoliticsRN RaviTamilNaduTN Assembly
Advertisement
Next Article