For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறுமி கொலை... புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்! இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு!

08:50 PM Mar 06, 2024 IST | Web Editor
சிறுமி கொலை    புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்  இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு
Advertisement

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுதினம் இந்தியா கூட்டணி கட்சிகளும், அதிமுகவும் பந்த் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

Advertisement

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக நாளை மறுதினம் (08.03.2024) பந்த் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினமே இந்தியா கூட்டணியும் பந்த்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியா கூட்டணி அறிவித்துள்ளதாவது;

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டியும், சிறுமி உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தக்கோரியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (07.03.2024) மாலை 4 மணிக்கு அமைதி பேரணியும், நாளை மறுதினம் (08.03.2024) புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டமும் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement