For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

07:48 AM Sep 01, 2024 IST | Web Editor
 hogenakkal   ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 000 கன அடியாக அதிகரிப்பு
Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது. இதன் காரணமாக நடைபாண்டிலேயே இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது.

அந்த வகையில், நேற்று மாலை விநாடிக்கு 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது இன்று காலை முதல் 25,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags :
Advertisement