For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியை புரட்டிப்போட்ட வெள்ளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு..!

06:51 AM Dec 20, 2023 IST | Jeni
தூத்துக்குடியை புரட்டிப்போட்ட வெள்ளம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை ஆய்வு
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு செய்ய உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ளவும் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் – ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!

இந்நிலையில், முன்னதாக இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு, நாளை (டிச.21) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Tags :
Advertisement