For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி! #ChiefSecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை!

04:19 PM Sep 02, 2024 IST | Web Editor
பள்ளி  கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி   chiefsecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை
Advertisement

கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன. இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று மதியம் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுருந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement