For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் 'துளிரும் விஞ்ஞானி' நிகழ்ச்சி - திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது!

'துளிரும் விஞ்ஞானி' நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.
01:11 PM Jul 31, 2025 IST | Web Editor
'துளிரும் விஞ்ஞானி' நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.
கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும்   துளிரும் விஞ்ஞானி  நிகழ்ச்சி   திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது
Advertisement

Advertisement

மாணவ, மாணவிகளிடையே இளம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் உன்னத நோக்குடன், 'துளிரும் விஞ்ஞானி' நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.

நியூஸ்7 தமிழின் மூத்த வியூக ஆலோசகர் திரு. ஷாம் மற்றும் பிருந்தாவன் பள்ளித் தாளாளர் திரு. அசோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இந்த சிறப்புமிகு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், எதிர்கால கண்டுபிடிப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இது இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'துளிரும் விஞ்ஞானி' நிகழ்வில், மாணவர்கள் தங்கள் அறிவியல் திறமைகளையும், புதிய கண்டுபிடிப்பு யோசனைகளையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும்.

பல்வேறு அறிவியல் மாதிரிகள், செயல்விளக்கங்கள் மற்றும் வினாடி வினாக்கள் மூலம் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும். இது வெறும் கற்றல் நிகழ்வாக மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும், அறிவியலின் மீதான காதலையும் வளர்க்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முன்முயற்சி, நியூஸ்7 தமிழின் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை அளித்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள், நாளைய தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கும், நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையிடுவதற்கும் பேருதவியாக அமையும் வகையில் உள்ளது.

Tags :
Advertisement