For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவையில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தேதி திடீர் மாற்றம்!

11:56 AM Jun 10, 2024 IST | Web Editor
கோவையில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தேதி திடீர் மாற்றம்
Advertisement

கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவர் மு.ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட”த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு,  நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த
மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீ ர்மிகு வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என
“முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.

திமுகத் தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,  வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.  அனைத்துக் திமுக மாவட்டங்களில் இருந்தும்,  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள்,  சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், திமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் திமுக செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement