For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதி விரைவில்”- நாசர்.!

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தின் திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.
04:45 PM Sep 21, 2025 IST | Web Editor
புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தின் திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.
”நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதி விரைவில்”  நாசர்
Advertisement

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று காலை நடந்தது. இதில் 950க்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் நிகழ்வை முன்னின்று நடத்தினர். முதலில் இந்த ஆண்டு மறைந்த சரோஜாதேவி, ரோபோ சங்கர், மனோஜ், டில்லிகணேஷ் உள்ளிட்ட 70 சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

நடிகர் சங்க பொதுக்குழுவில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பொதுக்குழுவின் நடிகர் சங்க புதுக்கட்டடம் கட்ட பணிிகளை முடிக்க தேவைப்படும் 10 கோடிக்கு ஒப்புதல்,  நடிகர் சங்க புதுக்கட்டத்தில் திருமணமண்டபம், மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பெயர்களை சூட்ட நிர்வாக குழுவுக்கு அதிகாரம், நடிகர் சங்க திறப்புவிழாவை சிறப்பாக நடத்த குழு, நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாக, தனிப்பட்டமுறையில் சமூகவலைதளங்களில் பேசுபவர்கள் சட்டரீதியிலான நடவடிக்கை, நடிகர் சங்க பணிகளுக்கு துணையாக இருக்கும் முதல்வர், துணைமுதல்வர், வருவாய், செய்தித்துறை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர் ‘‘சமூகவலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதுாறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது இன்னும் தீவிரமாகும். நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசியவிருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் ’’ என்றார்.

நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசுகையில் ‘‘பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும். நடிகர் சங்க கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர், நடிகையிடம் இவ்வளவு பணம் கொடுங்க என்று கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்களாக கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், பல முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவி’ என்றார்.

நடிகர் சங்க பொதுக்குழுவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ்,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்களும், முன்னணி நடிகைகளும் வழக்கம்போல் கலந்துகொள்ளவில்லை.

Tags :
Advertisement