For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலையோரம் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி... குவியும் பாராட்டு!

10:26 AM Feb 17, 2024 IST | Web Editor
சாலையோரம் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி    குவியும் பாராட்டு
Advertisement

சாலையோரம் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Advertisement

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமார்.  இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில் பிப்.15-ம் தேதி இரவு 9 மணி அளவில் குமார் மற்றும் அவரது மனைவி கற்பகவல்லி ஆய்க்குடி, மாயாண்டி கோயில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்புயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,  அவர்கள் செல்லும் வழியில் சுமார் ரூ.2,50,000  மதிப்பிலான 5 சவரன் தங்க சங்கிலி சாலையோரம் கிடந்துள்ளது.  அவர்கள் இருவரும்,  அந்த சங்கிலியை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படியுங்கள்: இப்படிதான் சாக்லேட் குச்சி ஐஸ் செய்றாங்களா? – இணையத்தில் வீடியோ வைரல்!

குமார் மற்றும் கற்பகவல்லி தம்பதியினரின் இச்செயலை பாராட்டி,  தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆய்க்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

Tags :
Advertisement