Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காளைகள் ரெடி.. மாடுபிடி வீரர்களும் தயார்.. - அவனியாபுரத்தில் இன்று தொடங்குகிறது #ஜல்லிக்கட்டு!

உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிகட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்
06:32 AM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில்,  ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

Advertisement

மாடுகள், மற்றும் மாடுபிடி வீரார்களுக்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்றது. போட்டியில், காளைகள் எண்ணிக்கை அவனியாபுரத்தில் 2,026 , பாலமேட்டில் 4,820, அலங்காநல்லுார் 5,786 என பங்கேற்க பதிவாகியுள்ளது. அதேபோல மாடுபிடி வீரர்களும் அவனியாபுரம் 1,735, பாலமேடு 1,914, மற்றும் அலங்காநல்லுார் 1,698 என்கிற அளவில் இணையதளம் வாயிலாக பதிவு செய்தனர்.

இதனையடுத்து விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பூஜைகள் வாடிவாசலில் நடைபெற்ற நிலையில்  காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 7மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
AvaniyapuramJallikattuMadurai
Advertisement
Next Article