For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன - இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!

06:54 AM Jun 15, 2024 IST | Web Editor
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன   இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு
Advertisement

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்ததை தொடர்ந்து இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.

இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.  இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு
வரப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி
மஸ்தான் கொச்சின் சென்றடைந்தார்.  இதேபோல கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயனும் கொச்சி விமான நிலையம் சென்றார்.

இதனைத் தொடர்ந்து குவைத்திலிருந்து உயிரிழந்த இந்தியர்களின் உடல் விமான நிலையம் வந்தடைந்தது.  இதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் கீர்தி வர்தன் ,  வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கேரள அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டது.

உயிரிழந்த தமிழர்கள் 7பேரின் உடல்கள் தனித் தனி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் நள்ளிரவு சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர்களது உடல்கள் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிஃபின் உடல் நள்ளிரவு செஞ்சி வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தேசூர்பாட்டை பகுதியில் உள்ள பத்தா பள்ளிவாசலில் தொழுகை நடத்திய பிறகு அவரது  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags :
Advertisement