Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்" - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

12:45 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

கரூர்,  ஈரோடு,  விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில்,  கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

 

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார்.  அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

அந்த உரையில்,  கரூர்,  ஈரோடு,  விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.  கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Tags :
AppavuBudgetBudget 2024GovernorspeakerTamil Nadu assemblyTamil Nadu Budget 2024Thangam thennarasuTN AssemblyTN Assembly 2024
Advertisement
Next Article