For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Samantha | "தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலாக்குவது தவறானது" - தெலங்கானா அமைச்சருக்கு #Jr.Ntr கண்டனம்!

10:37 AM Oct 03, 2024 IST | Web Editor
 samantha    தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலாக்குவது தவறானது    தெலங்கானா அமைச்சருக்கு  jr ntr கண்டனம்
Advertisement

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது தவறானது என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கொண்டா சுரேகா இது தொடர்பாக பேசியதாவது,

இதையும் படியுங்கள் :“காலாண்டு விடுமுறையில் #OnlineClass நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை” – TN பள்ளிக் கல்வி துறை எச்சரிக்கை!

“கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். கேடிஆர் பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் தளபக்கத்தில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது தவறானது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

“ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது சரியானதல்ல. பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள், கண்ணியத்தையும், தனியுரிமையையும் காக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, குறிப்பாக அதே பார்வையில் திரையுலகைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மற்றவர்கள் நமக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது நாம் அமைதியாக இருக்க மாட்டோம். நமது சமூகம் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையை இயல்பாக்க முடியாது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement