"தவெக தலைவர் விஜய் வடிகட்டிய பொய் பேசுகிறார்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"எதிர்பாராமல் நடத்த தீப்பிடிப்பு சம்பவத்தில் சிறுகாயம் ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கும் முதலமைச்சர் உத்தரவில் துரித நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அவர்கள் தங்குவதற்கு மருத்துவ உணவு வசதிகள் செய்து கொடுப்பது மட்டு மல்லாமல், தீ பிடிப்பு சம்பவம் நடந்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் உடனடியாக அந்த மக்களுக்கு 5000 ரூபாய் பணம், அரிசி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் அரசின் சார்பில் வழங்குபடுகின்ற ரூபாய் 8000 மற்றும் 10 கிலோ அரிசி, புடவை மற்றும் வேஷ்டி தற்போது வழங்கி இருக்கிறோம். ரேஷன் அரிசி அரசு சார்பாக வழங்கப்படுவது வழக்கம் என்று சொல்கிறார்கள். 24 குடும்பங்களுக்கு தேவையான அரிசி 42 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை
திமுகவின் சார்பில் வழங்கி உள்ளோம்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பள்ளி சான்றிதழ் பாடபுத்தகங்கள் ஒரு சிலருக்கு ரூபாய் நோட்டுகள் எறிந்திருக்குகிறது. அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் படிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைந்து திமுக பணிகளை மேற்கொண்டு பதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை துணை நிற்போம். அங்குள்ள 400 குடும்பத்தினருக்கு நிரந்திர வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்தவர், நடந்த உண்மை எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் அதன் மீது நடவடிக்கை எடுப்பார். துணை ஆணையர் தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது என்றார். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த விஷயம் செய்ய வேண்டுமோ அதில் முழு கவனம் செலுத்தி உள்ளோம். ஐந்து மாதங்களில் தீர்ப்பு தந்து சட்டத்தின் ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது, வசை பாடுவதை தவிர்த்தால் அதிகாரிகளுக்கு உற்சாகம் இருக்கும்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யே பேசுகிறார். அவர் அரசியலில் எதிர் கருத்துக்கள் வர வேண்டும் என்ற காரணத்தினால் நாகரிகம் மற்ற சொல்லை பயன்படுத்துகிறார் யாரோ எழுதிக் கொடுப்பதை அவர் பேசுகிறார்.
2026-ல் களத்திற்கு வரட்டும் அப்பொழுது மக்கள் என்ன தீர்ப்பு அளிப்பார்கள் என்பதை பார்க்கட்டும். குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடுகிறார். நடிகர் கமல் மன்னிப்பு கேட்கா விட்டால், தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என்ற கேள்விக்கு,
தக் லைப் விவகாரத்தில் அதற்கு உரிய பதிலை நடிகர் கமலஹாசன் சொல்லி விட்டார். திருமாவளவன், அன்புமணி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமே சொல்லிவிட்டது. மொழி விவகாரத்தில் யார் சொன்னாரோ அதற்கு உண்டான பதிலை அவரே சொல்லி விட்டார். இதில் எனக்கு என்ன இடையில் பஞ்சாயத்து செய்ய வேண்டியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாடு 22 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் என்பதை முருக பக்தர்கள் தெரிந்து கொண்டார்கள். பாஜக சார்பில் நடக்கும் மாநாடு சங்கிகள் மாநாடு. தமிழ்நாட்டில் முதன் முறையாக 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழக்க பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.