For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மது போதையில் ஏற்பட்ட தகராறு | 2 மகன்களுடன் சேர்ந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த தந்தை - #Sivakasi -ல் அதிர்ச்சி!

11:01 AM Oct 19, 2024 IST | Web Editor
மது போதையில் ஏற்பட்ட தகராறு   2 மகன்களுடன் சேர்ந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த தந்தை    sivakasi  ல் அதிர்ச்சி
Advertisement

சிவகாசி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளியை தந்தையும் 2 மகன்களும் சேர்ந்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்
ராஜசேகர்(40). கட்டட தொழிலாளியான இவருக்கும் அருப்புக்கோட்டை
ஆத்திப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் ( 38) என்பவருக்கும் திருமணமாகி,6-வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் ராஜசேகரை பிரிந்த மாரியம்மாள் தனது மகனுடன் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜசேகர் வீட்டின் பக்கத்து தெருவில் குடியிருக்கும் வைரப்பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது வைரப்பிரகாஷ் ராஜசேகரின் பிரிந்து சென்ற மனைவியை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் அவரை அடித்து சட்டையை கிழித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற வைர பிரகாஷை பார்த்த அவரது தந்தை விநாயகமூர்த்தி மற்றும் சகோதரர் விக்ரமன் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படியுங்கள் :“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” – கவிஞர் வைரமுத்து காட்டம்!

ஆத்திரமடைந்த விநாயக மூர்த்தி தன் இரு மகன்களையும் அழைத்து சென்று
ராஜசேகரை கத்தி, அரிவாள் போன்ற பொருட்களால் சரமாரியாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த மூவரும் காரில் தப்பி ஓட முயன்றபோது மதுரை மாவட்ட எல்லை பகுதியான கே.உசிலம்பட்டி பகுதியில் வைத்து 3 பேரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம்
அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement