For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்!

07:05 PM Apr 12, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்
Advertisement

தமிழ்நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக  சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

Advertisement

தமிழ்நாட்டில் சிவகாசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் உள்ளன.  இந்த ஆலைகளின் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.  இந்த பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளுக்கு தீப்பெட்டிகள் விற்பனைக்கு  கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது லைட்டர் வரத்து அதிகமாக உள்ளதன் காரணமாக தீப்பெட்டிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  20 ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையிலும் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக வாங்கி வந்து 10 ரூபாய்க்கு லைட்டர் விற்கப்படுகிறது என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இதனை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Tags :
Advertisement