For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#PMModi-யிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்த 3 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

11:56 AM Sep 27, 2024 IST | Web Editor
 pmmodi யிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன் வைத்த 3 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன
Advertisement

பிரதமர் மோடியை சந்தித்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய 3 முக்கிய கோரிக்கைகளை குறித்து தற்போது பார்க்கலாம்

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

இதையும் படியுங்கள் : டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் #MKStalin சந்திப்பு!

பிரதமர் மோடியை சந்தித்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய 3 முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:

1.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II- மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

2.தமிழ்நாட்டிற்கான சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை வழங்க வேண்டும்

3. இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி கலன்களை விடுவிப்பதற்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement