For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது!

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது.
09:37 AM Jan 06, 2025 IST | Web Editor
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது.
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது
Advertisement

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில் கூடியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

முன்னதாக பேரவை மண்டபத்துக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவை முதன்மைச் செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழாண்டும் தமிழக அரசு தயாரித்து அளித்துள்ள உரையை ஆளுநர் முழுமையாகப் படிப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மறைந்த பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்து இன்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tags :
Advertisement