For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் கடல் சீற்றம்!

10:18 AM Jul 17, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு  சென்னையில் கடல் சீற்றம்
Advertisement

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், சென்னையில் கடல் சீற்றமாக காணபடுகிறது.

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஷாருக்கானுக்கு வில்லனாக களமிறங்கும் அபிஷேக் பச்சன் – வெளியான புதிய அப்டேட்!

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement