For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் - டெண்டர் அறிவிப்பு!

03:06 PM Jul 26, 2024 IST | Web Editor
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்   டெண்டர் அறிவிப்பு
Advertisement

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வருடம் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.

இதேபோல கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டி.சி.சி காலிப் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குநர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒப்பந்ததார்களிடம் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது . இந்த டெண்டருக்கான கடைசி தேதி அடுத்த மாதம் 28ஆம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திறகும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களுக்கு டெண்டர் கோரப்பட்டப்போது தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தற்போது சென்னை போக்குவரத்துக் கழகத்திற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement