”கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி”
வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜயின் லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படம் இதுவாகும். ரஜினி-லோகேஷ் காம்போ முதல் முறை சேர்ந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாக்கியுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா என பான் இந்தியா நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 14ம் தேதி கூலிப் படம் வெளியாக உள்ளது. இதனால் படக்குழுவினர் தீவிரமாக படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனிருத் இசையில் கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஆகஸ்ட் 2ம் தேதி ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் அண்டை மாநிலங்களில் பிரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு கூலி திரைப்படம் வெளியாகும் ஆக.14 மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.