For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் கொண்டுவர தமிழக அரசு அனுமதி ...
11:33 AM Apr 23, 2025 IST | Web Editor
சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் கொண்டுவர தமிழக அரசு அனுமதி ...
சென்னை விமான நிலையம்   கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.

இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன.

Tags :
Advertisement