நெல்லையில் வாக்குத் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாடினார்.
இந்த நிலையில் இன்று நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேரா, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி தங்கபாலு,திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் வாக்கு திருட்டு உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.