For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்" - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

01:21 PM Feb 19, 2024 IST | Web Editor
 முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்    பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

அந்த உரையில் அவர் கூறியதாவது:

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை வழிநடத்திடத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுத்திடவும்,  முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், மின்னணு தொழில் நிறுவனங்கனின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பர்.
Tags :
Advertisement