For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

04:24 PM Jun 18, 2024 IST | Web Editor
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்   தமிழ்நாடு அரசு உத்தரவு
Advertisement

முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்புப் பொங்கலும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது.  அதேபோல 1 முதல் 5 வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார்.  இந்நிலையில்,  தற்போது முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

"இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்கப்படும்.

இதையும் படியுங்கள் : யுரேகா நிறுவன பொது மேலாளர், சர்வீஸ் இன்ஜினியருக்கு பிடிவாரண்ட்! நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement