For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory

05:38 PM Aug 18, 2024 IST | Web Editor
இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின்  instastory
Advertisement

கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் (ஆக.20) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில் உங்கள் மகள்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகன், சகோதரர், தந்தை, கணவர் மற்றும் நண்பர்களுக்கு ஆகியோருக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதை கற்பியுங்கள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement