For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொச்சியில் #Suriya44 படப்பிடிப்பு - ரசிகர்களுடன் Selfie எடுத்துக் கொண்ட சூர்யா!

07:55 PM Sep 09, 2024 IST | Web Editor
கொச்சியில்  suriya44 படப்பிடிப்பு   ரசிகர்களுடன் selfie எடுத்துக் கொண்ட சூர்யா
Advertisement

சூர்யாவின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வரும் நிலையில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ஆக.12 வெளியாகியுள்ளது.

’கங்குவா’ திரைப்படத்தின் பிரம்மாண்டமும், பின்னணி இசையும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. தீவு, மர்மம் என பின்னணி இசையுடன் தொடங்கும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இதில், வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். டிரைலர் முழுவதும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சூர்யாவின் வசனங்களும், தேவிஸ்ரீ பிரசாத் இசையும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தன.

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், கொச்சி சென்ற நடிகர் சூர்யாவை அவரின் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டனர். நிலைமையை சமாளிக்க முயன்ற நடிகர் சூர்யா ரசிகர் ஒருவரின் செல்போனில் சூர்யா அவர்களுடனிருக்கும் புகைப்படத்தை எடுத்தார். இந்த படம் தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement