For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரண்டாவது முறையாக சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’!

08:04 PM May 20, 2024 IST | Web Editor
இரண்டாவது முறையாக சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’
Advertisement

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.

Advertisement

கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கோட்டுக்காளி திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் ‘டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில்’ போட்டியிட தேர்வாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.

இதனை தொடர்ந்து டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதால் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்று வருகிறது.

வினோத்ராஜின்  ‘கூழாங்கல்’  திரைப்படம் 94-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. உலக அளவில் பல்வேறு விருதுகளை இத்திரைப்படம் குவித்தது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement