புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு கடந்த 24ம் தேதி முடிந்த நிலையில், கடந்த 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.06.2025) தேதி முதல் வழக்கம் போல் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.