For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழை | குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!

06:52 AM May 08, 2024 IST | Web Editor
சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழை   குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
Advertisement

சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Advertisement

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை.

கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கதை விட அதிகமாக வீசி வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலையில் 4.30 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இது தூங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர்,மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய சென்னையின் உள் இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த மழையானது நீடித்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

கடும் வெயிலால் வாட்டி வதைத்து கொண்டு இருந்த சென்னை சற்று நேரம் குளுகுளு மழையால் தணிந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கத்திரி வெயில் மண்டையைப் பிளந்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கத்திரி வெயிலை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என்று மக்கள் போராடி வருகின்றனர். தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தேடி தேடி செய்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தின் சில இடங்களில் மட்டும் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை சென்னையில் மழை பெய்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Tags :
Advertisement