For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன்! திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு!

05:22 PM Mar 15, 2024 IST | Jeni
மதுரையில் மீண்டும் சு வெங்கடேசன்  திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூ  அறிவிப்பு
Advertisement

மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும்,  திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  நாளை மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.  கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  இதையடுத்து அந்த இரண்டு தொகுதிகளில் யார் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகம்மது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 15 மாநில செயற்குழு உறுப்பினர்களும்,  85 மாநில குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : VoterID விவரங்களை ஆளுநர் ஏன் கேட்கிறார்? மாணவர்களின் போர்க்கொடியால் சுற்றறிக்கை வாபஸ்!

கூட்டத்திற்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார்.

சு.வெங்கடேசன்

மதுரையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன்(54) போட்டியிட்டார். சுமார் 14.41 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 28 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன், மீண்டும் அதே மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.சச்சிதானந்தம்

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சச்சிதானந்தம் (54).  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார்.  கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரம் ஊராட்சியில் இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார்.  35 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் நிலையில்,  சச்சிதானந்தம் தனது முதல் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறார்.  கடந்த மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்ற தொகுதி திண்டுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement