நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை - 2025ல் 15 உயிரிழப்புகள்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஜீஷன், ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவர் நேற்று(மே.26) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன்பு ஜீஷன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், அதே விடுதியில் தங்கி படிக்கும் வேறொரு மாணவியிடம் ஜீஷன் விசாரிக்குமாறு கேட்டுள்ளனர். தொடர்ந்து அந்த மாணவி ஜீஷனை தேடி வந்தபோது அறை பூட்டப்பட்டிருந்து. அதன் பின்னர் அம்மாணவி அங்கேயே கத்தி உதவி கேட்டுள்ளார். உடனடியாக அங்கு சக விடுதி மாணவிகள் என்னவென்று விசாரித்தனர்.
தொடர்ந்து ஜீஷனிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், சிலர் அருக்கில் வேலை பார்க்கும் தச்சரிடம் இருந்து ஆங்கிள் கிரைண்டரை வாங்கி கதவை உடைத்ததுள்ளனர். அப்போது ஜீஷன் மின்விசியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக ஜீஷனை அருகில் உள்ள சீஷான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர். இந்தாண்டு கோட்டாவில் நடக்கும் 15வது சம்பவமான இது, இந்த மாதத்தின் 2வது சம்பவமாகும்.