For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராகுலின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்தது எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சி - செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சி என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
05:20 PM Sep 10, 2025 IST | Web Editor
ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சி என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ராகுலின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்தது எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சி   செல்வப்பெருந்தகை
Advertisement

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

”மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜகவினர் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல, மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும். இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜகஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக அடக்குமுறையை பயன்படுத்துகிறது. இந்த செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிக்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement