Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RahulGandhi குறித்து அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது புகார் மனு!

03:01 PM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக பொறுப்பு குழு தலைவா் எச்.ராஜா சமீபத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்தும், அவரின் அமெரிக்க சுற்றுப் பயணம் குறித்தும் விமா்சனம் செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதன்படி கடந்த 18ம் தேதி தமிழ்நாடு எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்தனர்.

Tags :
BJPCongressH Rajanews7 tamilRahul gandhi
Advertisement
Next Article