For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வனத்துறை அலுவலகத்தில் அதிர்ச்சி - புலிப்பல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர் மர்ம மரணம்!

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் மாரிமுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:05 PM Jul 31, 2025 IST | Web Editor
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் மாரிமுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அலுவலகத்தில் அதிர்ச்சி   புலிப்பல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர் மர்ம மரணம்
Advertisement

Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம், மேல் குருமலையைச் சேர்ந்த மாரிமுத்து (40) என்பவர் புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி, வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உடுமலை வனத்துறை அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில், "மாரிமுத்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், உடுமலை வனத்துறை அலுவலகத்தில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மரணம் குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், வனத்துறை அலுவலகத்திலேயே எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் விளக்கம் கோரி வருகின்றனர்.

மாரிமுத்து புலிப்பல் வைத்திருந்தது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்ததன்பேரில் வனத்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாரிமுத்துவின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் வனத்துறை விசாரணையின் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து உடுமலை காவல்துறையினர் இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement