For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
07:37 PM Jun 09, 2025 IST | Web Editor
தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை   குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு
Advertisement

சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல் பட்டு
வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128
மாணவிகள் தங்கி கல்லூரிகள்,பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

Advertisement

இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் விழுப்புரம் மாவட்டம்
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13வயது மாணவி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் மாணவியை சேவை இல்லத்தில் தூங்கிக்கொண்டிருதார். அந்த நேரத்தில் ஒரு கயவன் அம்மாணவியை முகத்தில் துணியைக் கொண்டு மூடி
தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.

அப்போது மாணவி அவனிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த கயவனால்  கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இதில் கீழே விழுந்த மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டதால் அந்த கயவன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட
புகாரின் அடிப்படையில் போலீசார் மகளிர் விடுதிக்கு சென்று
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி
வந்தனர்.

மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுசுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலையில், முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் போலீசார் அரசு சேவை இல்லத்தின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த மேத்யூ (வயது-50) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காவலாளி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.  இதையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியை விசாரணை நடத்தினர். மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து உள்ளார் அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 14 வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும், பாதிப்புக்கு உள்ளான மாணவி நான்கு நாட்களுக்கு முன்னால் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் வெளியில் எதையும் சொல்ல மாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தராவில் காவலாலி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மேத்யூ மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல் நிலையத்திலிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது செய்தியாளர்கள் வீடியோவாக பதிவு செய்யும்போது வீடியோஎடுக்கக்கூடாது என கூறி  மேத்தியூவின் மகன் செய்தியாளரை தாக்கினர். இதனால் அங்கு சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இச்சம்பவம் அந்த விடுதியின் கண்காணிப்பாளர் ரேவதி பதிலளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தான் பணிக்கு வந்து 9 மாதம் காலம்தான் ஆகிறது என்றும், 2011 ஆம் ஆண்டு முதல் மேத்யூ விடுதியில் பணிபுரிந்து வருவதாகவும், மாணவி கிழே விழுந்துவிட்டுதாகவும் இரத்தம் போக்கு அதிகமாக இருந்தாகவும், அதனால் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் மேத்யூவை போலீசார்  ஆஜர்படுத்தினர். அப்போது மேத்யூவிற்கு வரும் 23ஆம் தேதி வரை, அதாவது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
Advertisement