Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

05:00 PM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஜன.31 ) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார். பின்னர், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை
நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18-ஆவது முறையாக நீதிமன்ற காவல்
நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கில் ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும், ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
appealBailMadrasHighCourtMinisterMinisterSenthilBalajiNews7Tamilnews7TamilUpdatesPetitionSENTHILBALAJI
Advertisement
Next Article