For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
08:13 PM Jun 13, 2025 IST | Web Editor
செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கோட்டை  ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும்   தெற்கு ரயில்வே அறிவிப்பு
Advertisement

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, செங்கோட்டையிலிருந்து ஈரோட்டிற்கு இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலானது, கரூர்-ஈரோடு இடையே நாளைய தினம் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், அந்தப் பராமரிப்பு பணியானது தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டை - ஈரோடு - செங்கோட்டை இடையே இரு மார்க்கமாக இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலானது நாளை வழக்கமாக இயங்கும் வழித்தடத்தில், வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
Advertisement