For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

07:55 AM Dec 13, 2023 IST | Web Editor
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்
Advertisement

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் இன்று (டிச.13) முதல் தொடங்குகின்றன.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதையும் படியுங்கள்:  ஆளுநர் விவகாரம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்!

இதனிடையே மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய கால அட்டவணையின்படி, 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (டிச.13) முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. இந்த தேர்வுகள் டிச.22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags :
Advertisement